Friday, November 14, 2008

புத்தகம்.!

பெண்னே நீயுமொரு புத்தகம்.!
பார்க்க ரசிக்க
மட்டுமல்ல
பாதுகாக்கவும் தான்!

தலைவர் சிலைகள்...!

ஜாதி சண்டைக்கு
துணையாய் நிற்கின்றன
மரியாதைக்காக நிறுப்பட்ட
தலைவர் சிலைகள்...!

நடிகையின் ஆடை...!

இல்லாத போது
ஏங்கினாள்!
இருக்கும் போது
ஓதுக்கினாள்..!
- நடிகையின் ஆடை...!

Tuesday, August 19, 2008

போராட்டம்..!

நானும்
கடல் அலையும் - ஏறக்குறைய
ஓன்று தான்...!
போராடிக்கொண்டே இருக்கிறோம்
வாழ்க்கையில் வெற்றி பெற..!

Thursday, August 14, 2008

பொறுமை..!

பெண்ணே
உனக்கு இவ்வளவு
பொறுமை கூடாது! - உன்
காதல் கடிதத்தை
என் கல்லறைக்கா
கொண்டு வருவது....!

பொறுமையாக செல்லவும்..!

பொறுமையாக
செல்லவும்
சாலையில் - அல்ல
வாழ்க்கையில்..!

அழகு..!

நீ! உச்சரிக்கும்
வார்த்தை கூட
அழகு தான்! - உனக்கும்
எனக்கும் என்ன
சம்மந்தம் என்று..!

நீ யார்..!?

இது கூட அழகாக
இருக்கிறது - யாரும்
என்னை பார்த்து கேட்காத
கேள்வி? நீ! யார் என்று..!

தேடுகிறேன்....

எனக்குள் உன்னை
தொலைத்து விட்டு
தேடுகிறேன் என்றாவது - நீ!
கிடைக்கமாட்டாய என்று...!

Wednesday, August 13, 2008

சத்துணவுக்காக...!

மழலைகள் மகிழ்ச்சியோடு
பள்ளிக்கு சென்றன
சத்துணவுக்காக...!

நிலவு...!

அமாவாசையில்
நிலவு...
எதிர் வீட்டுச் சன்னலில்...!

காதல்..!

மலர்கள் தேனைச்
சுரக்க மறுத்தாலும்
வண்டுகள் மலரைச்
சுற்றுவதை விடுவதில்லை..!

காதல்..!

காதல் ஓரு வாக்கியம்
எழுதி முடிபதற்க்குள்
நாம் சந்திப்பது வெறும்
எழுத்துப் பிழைகளே..!

Sunday, June 8, 2008

காதல்...!

உச்சரித்து பாருங்கள்
உதடுகள் கூட ஓட்டுவதில்லை
- காதல்...!

முத்தம்.........!

அவளின் உதட்டு ஈரம்
அச்சனது - என்
இதழில் அல்ல
என் இதயத்தில்....!

உனக்காக....!

உனக்காக பல
பலவற்றை விட்டுக்கொடுத்த - நான்
இப்போது என்னையும் விட்டு
கொடுக்கிறேன் உனக்காக...!

தேடி நின்றேன்....!

நேசமுடன் ஓரு மலரை - நான்
தேடி நின்றேன் - அது
பேச தினம் மறுத்ததினால்
வாடி நின்றேன்...!

மரணம்...!

சில நிமிடம்
இதயம் நின்றுவிடுகிறது
நீ - மற்றவர்களிடம்
விளையாடும் போது....!

கனவு...!

நிஜத்தி்ல்
முடியாததை
நிழலில்
சாதிக்கின்றேன்....!

விட்டுக் கொடுத்தல்...!

காதல் என்பது
விட்டுக் கொடுத்தல்!
சில சமயம் காதலேயே
விட்டுக் கொடுத்தல்

தற்கொலை...!

தினமும்
தற்கொலை
செய்துகொள்கிறது - அந்த
ஓற்றை ரோஜா நீ!
பார்த்து, பறிக்காமல்
போவதால்...!

முகப்பரு..!

பனித்துளி
சிந்தியிருப்பது
பூக்களில் மட்டுமல்ல!
என்னவளின்
முகத்திலும் தான்!
- முகப்பரு..!

லூசு..!

காகிதத்தில்
எழுதப்பட்ட வார்த்தை
இன்று நிஜமானது
லூசு..!

?....!

கேள்விகுறிக்கும்(?) ஆச்சிரியகுறிக்கும்(!)
வித்தியாசம் கேட்டேன் அன்று.
இப்போது பதில் சொன்னாய்
நீ! ஆச்சிரியகுறியாய் நான் கேள்விகுறியாய்..?

கவிதையாய் பிறக்கும்..!

உறவுகள் யாவும் - தினம்
பிரிந்த பின்பு தானே
உள்ளத்தை மயக்கும் - நீ!
என்னை விட்டு பிரிந்தலும்
உன் நினைவுகள் என்றும்
என் நெஞ்சில்
கவிதையாய் பிறக்கும்!

நினைவுகள்..!

நிஜத்தில் எழுதியதை
அழிக்க முடிந்த - எனக்கு
நிழலில் நினைத்தை
அழிக்க முடியவில்லை...!

நினைவு தடங்கள்...!

கடற்க்கரையில்
உள்ள - நமது
கால் தடங்களை
அழிக்க
போராடி கொண்டிருக்கிறது
கடல் அலை..!
அதற்க்கு ஏப்படி
தெரியும் அவை
கால் தடம் இல்லை - நம்முடைய
நினைவு தடம் என்று..!

Sunday, April 13, 2008

ஊமையாக்கி விட்டாய்....!

ஓரே வார்த்தையில்
என்னை ஊமையாக்கி விட்டாய்....
உன்னிடம்
பேசவில்லை என்று...!

வித்தியாசம் தெரியவில்லை...!

நிஜத்திற்க்கும் நிழலிற்க்கும்
வித்தியாசம் தெரியவில்லை – எனக்கு
காரணம் சிலசமயம் நிஜம் கூட
நிழலாகி போவதனால்...!

முழுமை அடைந்திருக்கும்....!

என்னவளே!
உன் சம்மதத்தை
கொஞ்சம்
தாமதமாக
சொல்லி இருக்கலாம்!
என் கவிதை
தொகுப்பாவது
முழுமை அடைந்திருக்கும்....!

ஓர் அனுமதி கொடு.....!

நீ விலகி செல்கிறாய்
ஓர் அனுமதி கொடு
உன் நிழலாவது
என் மீது விழட்டும்..!

வரம்....

முட்களே‍‍!
நீங்கள் மலராக மலர
இறைவனிடம்
வரம் கேளுங்கள்
என்னவள் சிலநேரங்களில்
செருப்பில்லாமல் நடக்கிறாள்...!

கோழை அல்ல....!

உன்னை பார்க்காமல்
போவதால் - நான்
கோழை அல்ல..!
நானும் வீரன் - தான்
உன்னை பார்க்கும் முன்பு..‍!

தினம் ஓரு உயிர்வதை...!

தினம்
ஓர் உயிர்வதை
உன்னால்
எனக்கு - நீ!
பார்த்து பேசாமல்
போவதால்....!

நேசிக்கிறேன்......

நானும்
உன்னை நேசிக்கிறேன்
தோழியாக அல்ல
என் தாயாக...

வாழ்க்கை கொடுத்திருக்கிறேன்.....!

வானத்தை சுருட்டி பேனா செய்தேன்..!
நிலவை உருக்கி மை எடுத்தேன்..!
நட்ச்சதிரங்களிருந்து வாழ்க்கை பெற்றேன்!
என்னவளே - உனக்காக
விதவையாக இருக்கும் இந்த
வெள்ளை பேப்பர்க்கு வார்த்தை - என்னும்
பொட்டு வைத்து
வாழ்க்கை கொடுத்திருக்கிறேன்.....!

கரை சேர விரும்புகிறேன்....!

கரை சேர விரும்பும்
அலைப் போல - நானும்
கரை சேர விரும்புகிறேன்
அவளின் நினைவுகளிலிருந்து....!

தற்கொலை முயற்சி...!

நிலவிற்க்கு ஏன்?
தற்கொலை முயற்சி - என்
கிணற்றில் தத்தலிக்கின்றது..!

தோல்வி..!

ஓரு லட்சம் இருக்கா!
பதில் சொல்லத்
தெரியவில்லை - நேர்காணல்
தேர்வில் தோல்வி..!

முத்துக்கள்......!

கடலில் மட்டுமல்ல
மனித உடலிலும்
முத்துக்கள்...
- வியர்வைத் துளி...!

வெண் மேகங்கள்.....!

வானமே!
உனக்குமா..?
வயதாகிவிட்டது..!

தேன்...

பூவே!
உனக்கு மட்டும்
ஏன்? இப்படி
இனிப்பான வியர்வை..!

வரதட்ச்சனை...

திருமண பட்டுபுடவையில்
இறந்து கிடப்பது பட்டுபுழுக்கள்
மட்டுமல்ல ஏழைதகப்பனின்
இதயமும் தான்....

Thursday, March 13, 2008

தேர்தல் வந்தச்சு....!

காலி சுவர்க்கு
இடம் பிடித்தன - எங்க
ஏரிய கழுதைகள்.
தேர்தல் வந்தச்சு....!

Saturday, March 8, 2008

பெண்மை..!

ஆடையால்
உடலை மட்டுமல்ல..
உள்ளத்தையும்
மறைத்துக்கொள்பவள்...!