Friday, May 29, 2009

கானல் நீர்.....!

என் காதலும்
கானல் நீர்
போலத்தான்..! - நானும்
ஏமாந்து போனேன்
தண்ணீர்க்கு ஏங்கும்
பறவை போல...!

பொறுமை....!

பெண்ணே
உனக்கு இவ்வளவு
பொறுமை கூடாது! - உன்
காதல் சொல்ல
என் கல்லறைக்கா
வருவது....!

Saturday, May 23, 2009

பாத சுவடுகள்...

மணல் சிற்பகலைஞர் கூட
தோற்று போவான்..!
கடற்க்கரை மணலில் - உன்
பாதம் வடிக்கும்
சிற்பத்தை கண்டு..!


எதற்கு வந்தாய் ...?

எதற்கு வந்தாய்
இலங்கையிருந்து- அகதியாய்..?
என் இதயத்தில்
குடியேறவா...!